நிமிர்வுகள் - 3- முறைதவறும் முன்மாதிரிகள்




அப்புக்காத்தரும்   அன்னம்மாக்காவும்…

அப்புக்காத்தர்:  இண்டைக்கு இவையளுக்கு ஒரு வழி பண்ணாட்டி… நான் யார் எண்டு பாருங்கோவன்…

அன்னம்மாக்கா:  ஏன்… என்னது…? யாருக்கு..?

அப்புக்காத்தர்:    எனக்கு இப்ப இருக்கிற கோபத்திற்கு… நீங்க வேற…

அன்னம்மாக்கா:  என்ன ஏதேனும் பிரச்சினையே…?

அப்புக்காத்தர்:  பிரச்சினையோவோ… நீங்களே சொல்லுங்கோ….. நான் யார்…?

அன்னம்மாக்கா:  உது என்ன கேள்வி… நீங்க இந்த ஊரில உள்ள ஒரு மெத்தப்படித்த பெரிய மனிசர்…அப்புக்காத்தர்….

அப்புக்காத்தர்:  அது சரி… எங்கட ஊர்க் கோயிலில நான் யார்…?

அன்னம்மாக்கா:  ஓ…. அதுவோ…  நீங்கள் தான் இப்ப கோயில் தர்மகர்த்தா சபையின்ர தலைவர்….

அப்புக்காத்தர்:  அதைத்தானே அடிக்கடி எல்லோரும் மறந்து போயினம்….

அன்னம்மாக்கா: ஏன்… என்ன நடந்தது…?

அப்புக்காத்தர்:  கூட்டத்தில நான் கதைக்கேக்க, யாரும் என்னைப் பார்த்து….
அதுவும் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கலாமோ…. சொல்லுங்கோ…

அன்னம்மாக்கா: ஏன்… கேள்வி கேட்கக்கூடாதோ…?

அப்புக்காத்தர் :நல்ல கதை… நான் யார்…?

அன்னம்மாக்கா:  (என்ன திருப்பி முதலில இருந்து….) தலைவர்…

அப்புக்காத்தர்: தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கலாமோ… தலைவர் சொல்லுறதைக் கேக்கிறதோ…. திருப்பி என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறதோ…?

அன்னம்மாக்கா: இது என்ன புதுக்கதை… நீங்கள் யார்?

அப்புக்காத்தர்: நான் தான் தலைவர்…

அன்னம்மாக்கா: தலைவர் எண்டா?

அப்புக்காத்தர்: கோயில் நிர்வாகத்தின்ர தலைவர்..

அன்னம்மாக்கா: அதுசரி.. என்னெண்டு தலைவராய் வந்தனீங்கள்?

அப்புக்காத்தர்: என்னெண்டு எண்டா?

அன்னம்மாக்கா: இவ்வளவு பேர் ஊர்ல இருக்க,நீங்கள் மட்டும் என்னெண்டுதலைவராய் வந்தனீங்கள்?

அப்புக்காத்தர்: ஓ.. அதுவோ.. நான் என்ன சும்மாவே வந்தனான்..
பொதுக்கூட்டம் வைச்சு எல்லாச் சனமும் வந்து, கூடப்பேர் வாக்குப்போட்டுத்தானே நான் இந்தத் தலைவராய் வந்தனான்..

அன்னம்மாக்கா: ஓம்.. அப்ப உங்களைத் தெரிவு செய்தாக்கள் உங்களைக் கேள்வி கேட்கக்கூடாதோ..?

அப்புக்காத்தர்: ம்;ம்.. அது வந்து.. கேட்கலாம் தான்.. எண்டாலும் நான் தலைவரெல்லோ..
----------+------------------+------------------+-------------------------

நெம்பு
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.