சாலையோரக் கவனங்கள்
சாலையோரங்களை..
சாவோரங்கள் ஆக்கி,
மரணிக்கவெனவே
பயணங்கள் தொடங்கும்…
தற்கொலைதாரிகளாய்…
அதிவேக ஓட்டக்காரர்கள்…
சொந்தக் காசு சேர்த்து,
வாகனம் வாங்கி,
உழைச்ச பணம் எண்ணி
எரிபொருளுக்காய் செலவிட்டால்..
வண்டி பறக்காது.., மனசுக்கு வலிக்குமென்று.
வேகம்,வெறி, வெற்றி…
சாகசம், கெத்து கேளிக்கை என்றும்,
அழைத்தவுடன் எடுக்க அல்லல்படும்,
அலைபேசி அவசரங்கள்…
மொத்தமாய் சிதறும்
சாலையோரக் கவனங்கள்…
இறைவன் படைத்த
உயிருக்கு மாற்றாய்,
இன்னும் எதுவும்
கண்டுபிடிக்கப்படவில்லை…!
உயிரைப் பணயம் வைக்கும்
பயணங்கள் வேண்டாம்…
உயிர்களில் பயம் கொண்டே
பயணங்கள் தொடர்வோம்…
எமக்கென்று உயிர்வாழும்
அன்பு நேசங்கள் நினைவோடு,
நிறைவாய், மகிழ்வாய் என்றும் திரும்புவோம்…
நெம்பு
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment