நிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது!




அப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ..?

அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போரைப் பார்த்தாச்சு…

அப்புக்காத்தர்:  என்ன சூரன்களின்ர போரோ…  எனக்கு விளங்கேல்லை…

அன்னம்மாக்கா: உந்த நாட்டு நடப்பு நாடகங்களைத் தான் சொல்லுறன்..

அப்புக்காத்தர்: ஓ. .ஓ.. அதுவோ… அதெண்டாச் சரிதான்… கனக்க சூரன்கள்
தான் போருக்கு வெளிக்கிட்டுட்டாங்கள்..

அன்னம்மாக்கா: நல்லா சுத்தி நிண்டு வேடிக்கை பார்க்கத்தான் சரி…

அப்புக்காத்தர்: சரியாய்ச் சொன்னியள்..

அன்னம்மாக்கா: சூரன்களின்ர போரில உந்த வேசக்காரருக்கு என்ன வேலை…?

அப்புக்காத்தர்: உப்பிடியான நேரத்தில. வேசம் போட்டு ஆடினாத்தானே பிழைப்பு நடக்கும்…

அன்னம்மாக்கா: நானும் ரவுடிதான் பாணியில, நாங்களும் சூரன்தான் எண்டு சும்மா தமாசு பண்ணிக்கொண்டு திரியுதுகள்…

அப்புக்காத்தர்: அரசியல் எண்டா வெறும் அறிக்கை விடுறது மட்டும் தான் எண்டது தானே எங்கட ஆக்களின்ர நினைப்பு..

அன்னம்மாக்கா: இருக்கிற காய்களை வைச்சு விளையாடவும் தெரியாது…
சும்மா கதிரைக் கணக்குக் குந்திக் கொண்டு இருக்குதுகள்…

அப்புக்காத்தர்: அடிச்சு விளையாடவும் தெரியாது… எறிஞ்சு விழுத்தவும் தெரியாது…

அன்னம்மாக்கா: தம்பிரான் புண்ணியத்தில சட்டைப் பை நிறைஞ்சாக் காணும் எண்டு இருக்குதுகள்…

அப்புக்காத்தர்: என்னத்தைச் சொன்னாலும் எங்கட சனம் நம்பும் எண்டு இன்னும் கனவு காணுதுகள்..

அன்னம்மாக்கா: கூட்டங்கள் கூடாமலே முடிவுகள் கூட்டாய் முடிவெடுத்ததாய் சொல்லுவினம்..

அப்புக்காத்தர்: ஓமோம்.. அதுவும் சரிதான்...

அன்னம்மாக்கா: தனிநபருக்குக் காட்டுற விசுவாசத்தில கொஞ்ச சதவீதத்தையேனும் தன்ர இன மக்களின்ர நலனுக்காகக் காட்டலாமே…

நெம்பு
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.