ஆளும் கலை
வாழும் கலையும் புரியாது,
ஆளும் கலையும் தெரியாது
வட்டத்தில் சுழல்கின்றோம்…
சனங்களின் நியாயத்தை கேளாதோர் - எல்லாம்
ஜனநாயகம் பொய்த்துவிட்டதாய் கூச்சலிடுகிறார்கள்…
புகைகள் தோன்றாமல் பூசல்கள் வருவதில்லை
ஆதிகார உரசல்களில், பொறிவராமல் போவதில்லை
இது ஒன்றும் புதிது இல்லை - உலகிற்கு.
இங்;கு மட்டுமே இப்படியானதாய்
மிகை கூவல்கள் எதற்கு…?
இன்று மட்டும் ஜனநாயகம் பேசுவோரேல்லாம்
இதுவரை காலமும் எங்கு போயினர்..?
தங்களின் ‘படிக்கு’ குறை வரப்போகுதென்று
மற்றவர் கறைகளைப் படம் பிடிக்கின்றனர்…
வெளிநாட்டு மூளைகளை துணைக்கழைக்கின்றனர்…
இன்று இங்கிருப்போர் - நாளை எங்கும் இருப்பர்
அரசியல் கீதைப்படி அனைத்தும் சரியே…
அதிகார சூதாட்டத்தில் மக்களே பகடைக் காய்கள்…
எதிர்ப்புக்காய், ஆதரவுக்காய் மக்கள் கூட்ட
நாடகங்கள்…
பிழை விடாதவனை விட– பிழைகளைத் தெரியவிடாமல்
காப்பவனே பெரியன் ஆகின்றான்…
அழிப்பவனே ஆக்குகிறான்…
ஆக்குபவனே அழிக்கின்றான்…- இது சமயநெறியும் கூட.
நெம்பு
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்
Post a Comment