பண்பாட்டு எழுச்சி ஊடாக தமிழ்மக்களை உயிர்ப்பிக்க முடியும் (Video)



இணக்க அரசியல். இணக்கம் என்றால் என்ன? தமிழினத்துக்கும் சிங்கள இனத்துக்கும் உடன்பாடு உள்ளது. இரு இனங்களும் தங்களின் விருப்பங்களை வைத்து அபிலாசைகளை வைத்து அதில் இணக்கம் ஏற்படுத்துவது தான் இணக்க அரசியலே தவிர இவ்வாறு முழந்தாளிடுவது இணக்க அரசியல் அல்ல. 

இன்று தமிழ் மக்கள் மத்தியில் என்ன உணர்வு தூண்டப்பட்டுள்ளது? இனி எங்களால ஏலாது. இவ்வாறு தெரிவித்த யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி. க.சிதம்பரநாதன் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2009 க்குப் பின்னர் தமிழ்ச் சமூகம் கூட்டு மன வடுவுக்கு உட்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அம்மக்களை அணுகி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். அரங்கினூடாக அம்மக்கள் தங்கள் கதைகளை கூற இடமளிக்க வேண்டும். அதனூடாக மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும். 

அப்போது தான் தமிழ்ச்சமூகத்தின் வாழ்க்கையை கட்டியமைக்க முடியும் என்கிற நம்பிக்கை வரும். அவரின் முழுமையான கருத்தை காணொளியில் காணலாம்...

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.