யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு (Video)

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 08.01.2020 வெள்ளிக்கிழமை இரவு அரச இயந்திரத்தின் உத்தரவுடன் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.  

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குறித்த நினைவுத்தூபி தரைமட்டமான செய்தியை அறிந்த தமிழ் மக்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள். 

அன்றிரவில் இருந்தே பல்கலைக்கழக முன்றலில் பொலிஸாரின் அடக்குமுறைகளையும் மீறி ஏராளமான உணர்வாளர்கள் குவிந்திருந்தனர். நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்புக்களை காத்திரமாக முன்னெடுத்தனர். 

தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் துணைவேந்தருடனான சந்திப்பை அடுத்து இந்தப் போராட்டத்தினை இடைநிறுத்துவதாக தாங்களாகவே முடிவெடுத்து ஊடகங்களுக்கு அறிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து இரண்டு விஞ்ஞான பீட மாணவர்கள் உறுதியுடன் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக கூறியதை அடுத்து மேலும் சில மாணவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.   

தற்போதும் குறித்த மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.