நிமிர்வுகள்
அப்புக்காத்தரும் அன்னம்மாக்காவும்…
அப்புக்காத்தர்: “அப்பனே ஆண்டவா.. எல்லாரும் நல்லா இருக்கவேணும்..” கும்பிட்டுக் கொண்டு திரும்பிறன்.. சொல்லி வைச்ச போல அன்னம்மாக்கா எதிரில வாறா.. நல்லதாய் போச்சு..
அன்னம்மாக்கா: “நாசமாய் போச்சு.. உவன் அலம்பல் அப்புக்காத்தரிட்ட மாட்டப்போறன் போல.. எல்லாத்துக்கும் உடனே ஓமெண்டு சொல்லி வைப்பம்..” எப்படி சுகங்கள்….? ஏதோ அவசரமாய் போறது போல கிடக்கு..
அப்புக்காத்தர்: அமைச்சரைச் சந்தித்து ஒரு மனு கொடுக்கப் போறன்…
அன்னம்மாக்கா: என்ன பிரச்சினை..? என்னத்துக்கு…? யாருக்கு..?
அப்புக்காத்தர்: எங்கட வீட்டுக்குக் கத்தரித்தோட்டம் வர வர நாசமாகிக் கொண்டு போகுது.. அதைக் காப்பாற்றச் சொல்லித்தான்…பல முறை பல அதிகாரிகளிடம் அறிவிச்சும், எல்லாரும் அசமந்தப் போக்கில இருக்கினம்.. இந்த முறை எழுத்தில மனு கொண்டுபோய் அமைச்சரிட்ட கொடுக்கப்போறன்..
அன்னம்மாக்கா: என்னது..?
அப்புக்காத்தர்: இதுக்கும் தீர்வில்லை எண்டாப்பிறகு…பெரிய பிரச்சினை வரும்.. தெரியும் தானே..
அன்னம்மாக்கா: அதுசரி.. யாற்ற தோட்டம்?..
அப்புக்காத்தர்: எங்கட தான்….
அன்னம்மாக்கா: சரியாப் போச்சு…என்ன நடந்தது…?
அப்புக்காத்தர்: திணைக்களத்தால தான் கத்தரி நாற்றுக்கள் தந்தவை… நட்டனான்… இப்ப அது வடிவாய் வளருதில்லை.. எங்களுக்கு மட்டும் ஏதோ செய்து போட்டாங்கள்…
அன்னம்மாக்கா: அதாலை…?
அப்புக்காத்தர்: அதாலை தான்.. முறையிடப் போறன்…
அன்னம்மாக்கா: என்னெண்டு…?
அப்புக்காத்தர்: வளரேல்ல எண்டு…
அன்னம்மாக்கா: நீ ஒழுங்காய் தண்ணீர் ஊத்தினனியோ..?
அப்புக்காத்தர்: இடைக்கிடை ஊத்திறனான்..
அன்னம்மாக்கா: பசளைகள் போட்டு.. பூச்சிகள் பிடிக்காம பார்க்கிறனியோ..?
அப்புக்காத்தர்: என்னது… என்னயே கேள்வி கேட்டுக் கொண்டு…
அன்னம்மாக்கா: அப்ப ஆரைக் கேக்கிறது…?
அப்புக்காத்தர்: ஆர் தந்தினமோ… அவையத்தானே கேட்கவேணும்…
----------+------------------+------------------+-------------------------
நெம்பு
நிமிர்வு ஆனி 2017 இதழ்
Post a Comment