நிமிர்வுகள் - 2 - விட்டதுறையும்... விடாதகுறையும்…
அப்புக்காத்தரும் அன்னம்மாக்காவும்…
அப்புக்காத்தர்: மயிலிட்டி விட்டாச்சாம்…நீங்க போய்ப் பாத்தனிங்களோ..?
அன்னம்மாக்கா: ஓமோம்;.. அண்டைக்கே போனனான்…
அப்புக்காத்தர்: அப்ப இனியென்ன, எல்லாம் சரிதானே…?
அன்னம்மாக்கா: என்ன எல்லாம் சரி…?
அப்புக்காத்தர்: மயிலிட்டி மீன்பிடித்துறையும் விட்டாச்சு… எல்லாரும் தொழில் செய்து நல்லா இருக்கலாம்…
அன்னம்மாக்கா: தொழிலோ…அது வேற கதை.. ஆனாப் பாருங்கோ, எங்கட கடற்கரையில கால்களை நனைக்கேக்க… எனக்குக் கடவுளையே, நேர கண்டமாதிரிக்கிடந்தது… கை கூப்பித் தொழுது, கரையில விழுந்து கும்பிட்டனான்.. கண்டியளே..
அப்புக்காத்தர்: மெய்யாலுமாவோ…?
அன்னம்மாக்கா: உண்மையாய்த் தான்.. ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிசமாய்… கண்ணில இருந்து தண்ணி பைப்பைத் திறந்துவிட்டமாதிரி வழிஞ்சு கொண்டே இருந்தது…
அப்புக்காத்தர்: இருபத்தியெட்டு வருசத்திற்குப் பிறகெண்டா…சும்மாவே என்ன..? அதுசரி…ஏன் தொழிலுகளுக்குப் போகேலாதோ…?
அன்னம்மாக்கா: துறையை விட்டாச்சுத் தான்… காணிகளையுமெல்லோ முழுசா விட வேணும்… பிறகு சனமெல்லாம் மெல்ல மெல்லத் திரும்பி வந்து குடியேறோணும்.. கட்டாந்தரையில இருந்து, ஒண்டொண்டாய் கட்டியெழுப்பிறதெண்டால்.. சும்மாவே.. காலநேரமும் வேணும்.. தூக்கிவிடக் கைகளும் வேணும் தான்..
அப்புக்காத்தர்: ஓமோம்;… அதெண்டாச் சரிதான்…நானும் ஒருக்கா வாறகிழமை அப்பிடிப் போய்ப் பாக்கத்தான் வேணும்…
அன்னம்மாக்கா : கட்டாயம் ஒருக்காப் போய் பார்த்திட்டுவாங்கோ அடுத்த கிழமை சந்திப்பம்
----------+------------------+------------------+-------------------------
நெம்பு
நிமிர்வு ஆடி 2017 இதழ்-
Post a Comment