நிமிர்வுகள் - 4- நீளும் காத்திருப்புக்கள்.

   


    அப்புக்காத்தரும்   அன்னம்மாக்காவும்…

அப்புக்காத்தர்: ஒரு மாதிரி ஜனாதிபதி கையெழுத்துப் போட்டிட்டார்…இனி உந்தச் சனங்களெல்லாம் போராட்டத்தை விட்டுட்டு நிம்மதியாய் இருக்கலாம் தானே என்ன..?

அன்னம்மாக்கா: என்ன கையெழுத்து…?  என்ன போராட்டம்..?திடீரென்று நீங்க தொடங்க எனக்கொண்டும் விளங்கேல்ல…

அப்புக்காத்தர்: சரி.. சரி.. விளக்கமாய் சொல்லுறன்.. உந்த காணாமல் போன ஆக்களின்ர உறவுகள் எல்லாரும் கனநாளாய் போராட்டம் செய்யினமெல்லோ…

அன்னம்மாக்கா: ஓம்..ஓம்..தெரியும்.. இருநூறு நாட்களுக்கு மேல தொடர்ந்து செய்து கொண்டிருக்கினம்…

அப்புக்காத்தர்:  அதுக்கு ஒரு முடிவு  இனி வரப்போகுது…

அன்னம்மாக்கா: அப்படியே… கனக்கப் பெரியாக்கள் எல்லாம் வந்து,வந்து பார்த்திட்டுப் போறவையெல்லோ…

அப்புக்காத்தர்:  ஓமோம்..  இரண்டு மூன்று தரம் ஜனாதிபதியையும் சந்திச்சவை..

அன்னம்மாக்கா: சனங்கள் அவரைச் சந்திச்சு என்ன கேட்டவை…

அப்புக்காத்தர்:  காணாமல் போன தங்கட உறவுகளைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லித் தான்…வேற என்ன..? கடைசி இருக்கிற ஆக்களின்ர பெயர்ப்பட்டியலயாவது தரச்சொல்லித்தான் அவை கோரிக்கைவிட்டவை…

அன்னம்மாக்கா: அது நியாயமானது தானே…போர் முடிஞ்சு  இத்தனை வருஷமாச்சு… தங்கட சொந்தங்கள் உயிரோட இருக்குதோ, இல்லையோ எண்டு மனம் அல்லாடுறது எவ்வளவு கஷ்டம்…

அப்புக்காத்தர்:  தங்கட பிள்ளைகளைத் தொலைச்சுப் போட்டு, தாய், தகப்பன்மார்  புத்தி பேதலிச்சுப் போய்த் திரியுதுகள்…

அன்னம்மாக்கா: அது சரி.. உறவுகளைக் காணேல்லை காணேல்லை எண்டா என்ன…?

அப்புக்காத்தர்: உது தெரியாதே… இறுதிப் போரில காணாமல் ஆக்கப்பட்டவையள் தான்….

அன்னம்மாக்கா: நல்லாத் தெரியுது எனக்கு…  ஆனா முக்கியமான ஆக்கள் தான், விளங்காதது போலத்திரியினம்… ஏதோமெஜிக் செய்து ஆக்கள் காணாமல் போயிட்டினம்… வானத்தில இருந்து மெஜிக்மான் வந்துதான் கண்டுபிடிச்சுக் குடுக்கவேண்டுமென்று எல்லாரும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கினம்…

அப்புக்காத்தர்: அதெண்டாச் சரிதான்…ஏதோ உந்த காணாமல் போனோருக்கான அலுவலகத்தைத் திறந்து தன்னும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்தாச் சரி…
----------+------------------+------------------+-------------------------


நெம்பு
நிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-






No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.