நாற்காலிகள் தேவை
அவன் குற்றம்...
இவன் குற்றம்… சொன்னால்
நான் குற்றம் இல்லை,
நம்புங்கள்...!
சிறுகுற்றம் செய்வோருக்கு,
உடனடிச் சிறைத்தீர்ப்பு…
பெருங்குற்ற முதலைகளுக்கு,
குற்றம் இல்லையெனச் சொல்லி
விசாரிக்க குழுக்கள் பல கூடும்…
ஆள்பவனை விடுத்து,
ஆண்டவனே நல்லதென…
முடிவெடுக்க வைக்கும்,
ஆள்பவர்கள் கூத்து…-அனைத்தும்
பார்த்துச் சலித்துப் பேதலிக்கும் மனது…
குற்றங்கள் இல்லை...
சுற்றங்கள் இல்லை...
இணைந்த கைகள் இவை,
இமயங்கள் எட்டும் என்றார்,
ஏறியது என்னவோ - விலைகளும் வரிகளும் தான்
நலன்தரும் நற்செயற் திட்டங்களின்றி,
வெறும் வாய்ச்சொற்கள் - எத்தனை நாள்
வாய்க்கரிசி போடும்…?
நாற்காலிகள் தேவை..-
நாங்கள் நல்லவர்கள்…
கெடுதல் ஒன்றும் செய்யமாட்டோம்…
நல்லவையும் செய்ய அறியோம்..
நம்பி வாருங்கள்…!
நலமாய் வாழுங்கள்…!
நெம்பு
நிமிர்வு மாசி 2018 இதழ்-
Post a Comment