நிமிர்வுகள் - 13 - சலிக்கும் வாழ்க்கை!





அப்புக்காத்தரும்….  அன்னம்மாக்காவும்.;..

அப்புக்காத்தர்:  இப்ப நிறையச் சனங்களிற்கு வாழ்க்கையில பிடிப்பு இல்லாமல் போய்க்கொண்டிருக்கு…

அன்னம்மாக்கா: ஓமோம்...  அதெண்டாச் சரிதான்…

அப்புக்காத்தர்: ஆனா ஏன் அப்படி என்று தான்   தெரியேல்லை…

அன்னம்மாக்கா: வர வர எல்லாருக்கும் வாழ்க்கையில பிடிப்பு இல்ல, சலிப்புத்தான் மிச்சம்…

அப்புக்காத்தர்: அப்ப போர்க்காலத்தில எல்லாரும் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு அதைக் காப்பாற்றத்தான் ஓடிக்கொண்டிருந்தவை…

அன்னம்மாக்கா:  இப்ப எல்லாரும் உயிரைக் கயித்தில பிடிச்சுக் குடுக்கவெல்லோ திரியுதுகள்…

அப்புக்காத்தர்: ஏன் இப்படிப் போச்சுதுகளோ தெரியேல்லை...

அன்னம்மாக்கா: பொசுக்கெண்ட முதல் கயித்தில தொங்குதுகள், இல்லாட்டி நெருப்பில குதிக்குதுகள்.. .

அப்புக்காத்தர்: தப்பி இருக்கிறதுகளும் ஏனோ தானோ என்று மனஅழுத்தத்திலும் விரக்தியிலுமே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்குதுகள்…

அன்னம்மாக்கா: எல்லாம் இருந்தும் ஒண்டும் இல்லை எண்ட நிலைதான்...

அப்புக்காத்தர்:என்ன அது எனக்கு விளங்கேல்லை…

அன்னம்மாக்கா: முன்னையவிட இப்ப எல்லாரும் வசதி வாய்ப்பாய்த் தானே வாழுறம்…

அப்புக்காத்தர்: ஓமோம்…

அன்னம்மாக்கா:  ஆனா… அதுகளைச் சந்தோசமாய் அனுபவிச்சு வாழத்தெரியேல்லை…

அப்புக்காத்தர்: ஓமோம்.. எப்பவும் கிடைக்காதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டு திரியுறம்...

அன்னம்மாக்கா: ஓம்… உதுதான், இருக்கிறதை விட்டிட்டுப் பறக்கிறதைப் பிடிக்கப்போய் பள்ளத்தில விழுகிறதென்பது...

அப்புக்காத்தர்:பிரச்சினைகளை இலகுவாக கையாள சிறுவயதில இருந்தே பழக்கவேணும்...

அன்னம்மாக்கா: நாங்கள் எங்ககையாளப் பழக்கிறம்...  பிரச்சினைகளைக் கண்டா விலகி ஓட எல்லோ பாக்கிறம்..

அப்புக்காத்தர்: அந்த ஓட்டத்தின்ர உச்சக் கட்டம் தான், உலகத்தை விட்டே ஓடுறது…

----------+------------------+------------------+-------------------------

நெம்பு
நிமிர்வு யூன் 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.