மனமும் மார்க்கமும்
மனதை வழிப்படுத்த
வழிபடும் இறைவன் பெயரால்
வன்மங்கள் செய்வதை
பொறுக்க முடியுதில்லை…
ஆண்டவன் உயிர்த்தான் என்று
கொண்டாட வந்தவர்களை
விண்ணோடு ஏகச் செய்த
மார்க்கம் போவது எங்கே…
எல்லாம் கிடைத்தும்
நிறைவுறாமனங்களை
மதங்களின் பெயரால்
கெடுத்ததே ஒரு கூட்டம்…
அளவற்ற அருளாளன்
உயிர்கொல்லச் சொல்வானோ…
அவனியில் இருப்பதெல்லாம்
ஆண்டவன் படைப்பன்றோ…
மனங்களே விழித்திருங்கள்…
மறையின் பெயராலே,
பள்ளங்கள் மறைந்திருக்கும்..
கறையைத் துடைத்து
முறையாய் முன்னேறுங்கள்…
எல்லோரும் வாழலாம் நன்றாய்
நெம்பு
நிமிர்வு வைகாசி 2019 இதழ்
Post a Comment