நிமிர்வு வேண்டி நிதம்



நிமிர்வு வேண்டி நிதம்
நித்தம் கூச்சல் போடுகிறோம்.
தெருவெளியில் வந்து.

உரிமைகளுக்காய், உயர்வுகளுக்காய்…
யார் யாரோ பறித்ததற்காய்…

பதிந்த கூரைகளின் கீழ் இருப்பதனால்,
தவழ்ந்து வாழ்கிறோம் என்கிறோய் -
நிமிர்ந்து அதன் உயரம் பார்க்காமலேயே…

எமது கைகள் கட்டப்பட்டு விட்டன…
கால்கள் முடக்கப்பட்டுவிட்டன…-
என்று சொல்லிச் சொல்லியே
சோம்பேறிகளாய் ஆகிவிட்டோம்… -
இயலுமான அசைவுகளைக் கூடத்
தோலைத்துவிட்டு…

யார் யாரோடோ மோதுவதாய்
காட்டிக்கொள்கிறோம்…. உள்ளே
தினம் ஒருவர் மற்றொருவருக்காய்
குழி பறித்துக்கொண்டே…

எமது முதுகெலும்பால் - நாமே
நிமிர்வதற்கு,
யார் தயவும் தேவையில்லை….

நாமே நிமிர்வோம்…
நம் குற்றங்கள் களைவோம்…
நம் கரங்களால் கட்டுவோம் -
நமக்கான நல்ல எதிர்காலம் ஒன்றை….

நெம்பு
நிமிர்வு ஆனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.