வழிகள் திறக்கட்டும்



வேலிகளே சிறைகளாகி,
பயிர்களை வாட்டுகின்றன…
காத்தல் மறந்து,
அழித்தலே தொழிலாயின…

தானே, தன் காலில் - சுயமாய்
ஒருவன் நின்றால்,
- அவன் தன்மானச் சிங்கம்!
ஒருத்தி நின்றால்,
- அவள் அவமானச் சின்னம்!

கட்டிற்குள் நின்றும்,
ஆறாய் பெருகுவாள்…
கட்டளைகள் இட்டும்,
கலங்கரை விளக்காய் நிற்பாள்…

தன் வழி பார்க்கும்
தைரியம் உள்ளவளை,
வீண்பழிசொல்லி,
வீட்டிற்குள் முடக்காதீர்…

கட்டற்ற உலகில்
காற்றாய் பறந்து சென்று,
எல்லோரும் மகிழ்வுடன் வாழட்டும்…
வழிவிடுங்கள்…!
 - உங்கள் வசை வாய்களை மூடி.

நெம்பு
நிமிர்வு  பங்குனி2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.