நிமிர்வுகள் - 19 ஜனரஞ்சக ஜனநாயகம்



அப்புக்காத்தர்: ஒரு மாதிரி ஜனநாயகம் வென்றிட்டுது பார்த்தியளே..?

அன்னம்மாக்கா: என்ன ஜனநாயகமோ…?

அப்புக்காத்தர்: ஜனநாயகப் பாதுகாவலராய் இருந்து நாட்டைக் காத்தது எங்கட தலைமைகளெல்லோ..!

அன்னம்மாக்கா: அட அப்படியே...

அப்புக்காத்தர்: மீண்டு வந்த தலைமை அமைச்சர் இப்ப என்ன சொல்லிறார் எண்டு தெரியுமே..?

அன்னம்மாக்கா: என்னவாம்…?

அப்புக்காத்தர்: “செய்வதைச் சொல்வேன்: சொன்னதைச் செய்வேன் (வேறொன்றும் தெரியாது)”எண்டெல்லே சொல்லிறார்.

அன்னம்மாக்கா: யார் சொன்னதைச் செய்வாராம்…?

அப்புக்காத்தர்: அவர் சொன்னதைத் தான் …?

அன்னம்மாக்கா: அட… நான் ஆரோ சொன்னதைத் தான் செய்வாராக்கும் எண்டு நினைச்சுப் போட்டன்

அப்புக்காத்தர்: நீங்கள் என்ன ஒண்டும் விளங்காம நிக்கிறியள்..

அன்னம்மாக்கா: அது சரி.. இப்ப கொஞ்ச நாளாய் ஒரு இடத்தில இருந்து மண்ணை வெட்ட வெட்ட எலும்புக்கூடுகளாய் வருகுதாம்;: அந்த இடம் இலங்கை நாட்டுக்குள்ளே வராதோ

அப்புக்காத்தர்: ஏன் அப்படிச் சொல்லுறியள்…?

அன்னம்மாக்கா: ஜனநாயகப் காவலர்கள், 269 எலும்புக்கூடுகள் வரை எடுத்தும் வாய் மூடித்தானே இருக்கினம்… அதுக்கெல்லாம் ஆரும் வழக்குப் போட்டதாயே தெரியேல்லையே…

அப்புக்காத்தர்: ஓமோம்... என்ன..

அன்னம்மாக்கா: பெரும்பான்மைகளின்ர பிரச்சினைக்குத் தான் எங்கட தலைமைகளும் கை கொடுப்பினம் போல…

அப்புக்காத்தர்: ஓமோம்.. கொழும்;பில ஜனநாயகம் இருந்தாச் சரிதானே...

நெம்பு
நிமிர்வு மார்கழி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.